
Thursday, December 24, 2009
Monday, December 14, 2009
கண்ணனைக் காணும் கண்கள்.

Saturday, December 5, 2009
கவிஞரைக் காணா உள்ளம்.....

வயது : 35
முகவரி : அன்புடன் நான்
அவரின் பெயரையும்,கவிதையைத் தவிர ஏதும் அறியேன்;தாயையும் அன்பையும் மட்டும் அறிந்த குழந்தையைப் போல்.
//மொழிக்கும்
விழிக்கும்
வித்தியாசம் அதிகமில்லை !
இரண்டும்...
பேசும் இயல்புடையவை .//
எந்தப் பேச்சு புரிந்த்ததோ?
//உன்னையே வேண்டிய
உயிரின் இதயத்தை
வேரோடு பிடுங்கிச் செல்கிறாய் !//
எனக் கதறினார் ஒருமுறை,அதை நானறிவேன். இதயம் பிடுங்கியவர் திரும்ப அளித்து,அவருடையதையும் கொடுத்து,கூட்டிச் சென்று,பொறுப்பளித்து எனதன்புப் பாலத்தை உடைத்திருப்பாரோ?
//என்னை வதைத்து
எங்கோ நீ செல்வது
பெண்மையே உனக்கு சிறப்பா ?//
கதறினார் அன்று.நம்மை உதறினார் இன்று.
மலேசியாவில் 2005_ல் நடந்தேறிய முதலாவது உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டி, உலக அளவில் வள்ளுவம் பற்றிய புதுக்கவிதைக்கான ஆறுதல் பறிசை வென்ற கவிதையில்
//பழமை நட்பையும்
படைப்பில் அடக்கிய காவியம்//
என்றாயே,வார்த்தைகளை வளைத்தாய் அன்று, உடைந்த உள்ளத்தை அறிவாயா இன்று.
//சொந்த உழைப்பினில்
சிந்தும் வியர்வையில்
புதைந்து இருக்குது வெற்றி !-அதை
புதையலென எடு வெட்டி !!//
புதையலை வெட்டி எடுக்கச் சென்றிருப்பாயோ? சொல்லியிருந்தால் நானும் வருவேனே, புதையலை பங்கு போட அல்ல, மாறாக உழைப்பின் உன்னதத்தை உணர.
சத்ரியனுக்கு(பிறந்த நாளுக்காக) நான் அனுப்பிய கேக்-கை சுவைத்த பின்
// முட்டை குறைவு ( அவருக்கு* சொரணை தேவை ..... கொழுப்பு தேவை இல்லை என்ற அர்த்தத்தில் )// * சத்ரியன்
என்றாயே, முட்டை எடுத்து வருமுன், எனக்கே முட்டைப் போட்டாயோ?
//வல்லிய நம்பிக்கையோடு
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் .
பொழுது ஒருநாள்
புலரும்மென்றும் _ அப்போ
எங்களின் ...
மனம் என்ற ...
மலர்கள் மீண்டும் ...
மலருமென்றும்!.
//
இதை சொன்னதும் நீதான். இந்தப் பூக்கள் மலரும் நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை.
பின் குறிப்பு:
ஹேமா, கலா, சத்ரியன்(எங்காவது பெண்கள் கூட்டம் இருக்குமிடத்தில் இருப்பார்,கவிதைக்கான கருவைத் தேடி), ஜமால்(வேலைக் கிடைக்க உதவுவது போல்,இதற்கும் கொஞ்சம்...) ஆகியோருக்கு....
நண்பரைக் கண்டுபிடிக்க உதவ வேண்டுகிறேன். தொலைக்காட்சி,நாளிதழ், ‘இண்டர்போல்’ என எந்தக் கதவையாவதுத் தட்டுங்கள்.அங்கேப் போய் கேளுங்கள். ஏனெனில்
”தட்டுங்கள் திறக்கப்ப்டும்;கேளுங்கள் கொடுக்கப்படும்”
நான் நம்புகிறேன்।
Thursday, November 12, 2009
சில நாட்கள் தேவை.....
வெகு நாட்களாக நான் இந்தப் பக்கம் வருவதை நிறுத்தி விட்டேன். அதற்கு காரணம் உண்டு.
அக்டோபர் 12ந் தேதி மாலை 4:30 மணியளவில் எனது அலைபேசி ஒலித்தது. அப்போது இந்திய நேரம் அதிகாலை 3:00, குழப்பத்துடன் எடுத்தேன்.பேசியது எனது தந்தை. பேரிடியாக ஒரு தகவல் தந்தார். எனது சகோதரன் எங்களை விட்டுப் பிரிந்ததாகச் சொன்ன போது எனக்கு ஒன்றும் புரியவில்லை.
எனது சகோதரர்(வயது 40), சிங்கப்பூரில் உள்ள தேசியப் புற்று நோய் கழகத்தில், விஞ்ஞானியாக பணியாற்றினார்.எதைப்பற்றி ஆராய்ச்சி செய்தாரோ அதே புற்று நோயால் உலகையும் எங்களையும் விட்டுப் பிரிந்தார்.எனவே நான் இந்தியாச் சென்று திரும்பியிருக்கிறேன்.இன்னும் அதிர்ச்சி மீளாமல் இருக்கிறேன்.
என்னைக் காணாமல் தேடிய நல் உள்ளங்களுக்கு(குறிப்பாக தோழர் கருணாகரசு அவர்களுக்கு) நன்றி.மீண்டு(ம்) வருவேன்.முன் போல் தொடருவேன் இன்னும் சில நாட்களில்.....
Friday, October 2, 2009
Thursday, September 3, 2009
ஔவை – சுட்ட பழம்...
- இது,’அரியது எது? என்ற முருகனின் கேள்விக்கு ஔவையின் பதில். தகடூரை ஆண்ட அதியமான் ஔவைக்கு நெல்லிகனி கொடுத்தது,ஆத்திசூடி இவற்றின் மூலம் நமக்கு அறிமுகமானவர் இவர்.
ஔவையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்தனர் என்றும்,பெண்பாற் புலவர்களை இந்த பெயரில் அழைததனர் என்றும் பல்வேறு செய்திகள் உள்ளன. மிக எளிமையாகவும்,சுருங்கவும் சொல்லுவதில் வல்லவர். வள்ளுவர் எழுதிய குறளை விடவும் சுருங்க சொன்னவர்.
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”
இதை “எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” என்று சுருக்கினார்.
ஔவையார் சிறுமியாய் இருக்கும்பொழுது ஒரு புலவர் அவரது தந்தையாரைக் காண வருவார். அவர் எழுதிய கவிதை ஒன்று,
நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா -
என்று பாதியில் நின்றுவிட்டதென்று சொல்ல அப்போது அங்கு வந்த சிறுமி ஔவை
நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.
என்று மீதிப்பாடலைக் கூறினார்.
பொருள் : நாம் ஒருவருக்கு உதவி செய்கையில் அதன் கைம்மாறான பலன் நமக்கு என்று கிடைக்கும் என்று எண்ணிச் செய்யக்கூடாது. தென்னை மரம் அதன் வேரில் ஊற்றும் தண்ணீரை உண்டு வளர்ந்து, இளநீராகவும் தேங்காய்களாகவும் தன் தலையில் உருவாக்கி நமக்குத் தருவது போல் நாம் பிறர்க்குக் கைம்மாறு கருதாமல் உதவினால் நமக்கு உதவி தேவைப்படுகையில் அது தானாகவே கிடைக்கும்.
ஔவை ஒரு சமயம் குலோத்துங்கன் அரசவைக்கு வருகை தந்தபொழுது ,ஆணாதிக்கம் மிக்க அந்த காலத்தில், கம்பர் அவரைப் பார்த்து ஔவையாருக்கும் ஆரைக்கீரைக்கும் சிலேடையாக தரக்குறைவாக(டீ என) விமர்சிக்க,
“ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ”
என்று கூற ஔவையார் கோபங்கொண்டு
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா விடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது
என்று பதில் வந்தது ஔவையிடமிருந்து.
எட்டு (8) என்ற எண்ணுக்குத் தமிழில் “அ”, கால் (1/4) என்ற எண்ணுக்கு “வ”, அதனால் எட்டேகால் லட்சணமே என்றால் “அவலட்சணமே” என்றாகிறது. எமன்ஏறும் பரி என்றால் எருமை.பெரியம்மை என்றால் மஹாலக்ஷ்மியின் அக்காளான மூதேவி. கூரையில்லா வீடென்றால் குட்டிச்சுவர். குலராமன் தூதுவன் அனுமன் ஒரு குரங்கு. கம்பர் ராமாயணத்தை எழுதியதால் அவர் ஒரு வகையில் ரராமனின் தூதுவனாகிறார். நீ சொன்னது ஆரைக்கீரை எனும் பொருள்பட அடீ என்று சொன்னதற்கு பதிலுரையாக “அடா”வைச் சேர்த்து ஆரையடா என்றார்.
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று”
- இவை நாம் சிறுவயதில் படித்தவை.கொன்றை வேந்தன் என்னும் நூலில் உள்ள பாடல்கள் இவை.
“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை”
- இடு மூதுரையில் உள்ள பாடல்.
பெரும்பாலான பாடல்களுக்கு விளக்கவுரை தேவையில்லை என்பது இவரது சிறப்பு.
Tuesday, September 1, 2009
மெய்யாலுமே சொல்லுறேன்.....
The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABCs of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag.
1. அன்புக்குரியவர்கள்: எதிரிகளும் கூட
2. ஆசைக்குரியவர்: சர்மிளா(மனைவியாய் இப்போது, காதலியாய் எப்போதும்)
3. இலவசமாய் கிடைப்பது: அறிவுரை
4. ஈதலில் சிறந்தது: வறியார்க் கொன்று ஈவதே
5. உலகத்தில் பயப்படுவது: துரோகிகளுக்கு
6. ஊமை கண்ட கனவு: கானல் நீர்
7. எப்போதும் உடனிருப்பது:புன்னகையும் கோபமும்
8. ஏன் இந்த பதிவு: நட்புடன் ஜமால் அழைத்ததால்...
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: போதும் எனற மனம்
10. ஒரு ரகசியம்: சொல்லிவிட்டல் தகுதி இழந்துவிடுமே
11. ஓசையில் பிடித்தது: குழல் இனிது யாழ் என்பர் தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்
12. ஔவை மொழி ஒன்று: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
13. (அ)ஃறிணையில் பிடித்தது:புத்தகங்கள்(ந்ம்மை உயர்திணையாக்குவதால்)
1. A – Available/Single? Nope,It's too late to ask
2. B – Best friend? : Everyone who believes me
3. C – Cake or Pie?: None
4. D – Drink of choice? : Tender coconut water
5. E – Essential item you use every day? :Mobile phone
6. F – Favorite color? : white
7. G – Gummy Bears Or Worms?: Table etiquette
8. H – Hometown? - it's tiny world
9. J – January or February? No. it's June
10. K – Kids & their names? Anbukumaran (Boy Baby)
11. L – Life is incomplete without? – wife & Money
12. M – Marriage date? 08 Nov
13. N – Number of siblings? 2brothers & 1sister
14. O – Oranges or Apples? oranges
15. P – Phobias/Fears? careless
16. Q – Quote for today? : God Looks down to all who look up.
17. R – Reason to smile? : HE decides
18. S – Season? Winter(india) Falls(America, It is not session but….)
19. T – Tag 4 People? ஹேமா, என் வானம் அமுதா, விக்னேஷ்வரி,நிலா மகள்
20. U – Unknown fact about me? In search of that...
21. V – Vegetable you don't like? Cabbage
22. W – Worst habit? laziness
23. X – X-rays you've had? Right hand when i met accident(2003,at Adyar,chennai)
24. Y – Your favorite food? Rice,Kara kuzhampu(India),chicken chalupas,Bean Baritto(America)
Thursday, August 20, 2009
கடவுளைத் தேடி... பயணம் - 1

கேட்பதற்கு சற்றே வியப்பாக இருந்தாலும், 'தம் முயற்சி மெய் வருத்த கூலி தரும்' எனற பொய்யாமொழிப் புலவரின் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை நம்புவோம்.
மகான்களும்,முனிவர்களும் செய்த முயற்சி இது.இந்தப் பாதையில் சற்று நடந்து விட்டு வரும் ஒரு ஆசை. இது ஏற்கனவே முயற்சித்தவர்களின் பாதை. இதுப் புதுப்பாதை அல்ல. அவர்களின் முயற்சி,பாடல்கள் என சிலவற்றை அலசிப் பார்க்கும் தொடர்.சிததர்கள்,யோகிகள்,புலவர்கள் முனிவர்கள் இவர்களின் பாதையைத் தெரிந்து கொள்ளும் முயற்சி.
யாரையும்,எந்த நம்பிக்கையையும் தகர்க்கும் முயற்சி அல்ல.கீதை,பைபிள்,குரான் ஏன் புத்தனையும் கேட்டுப் பார்ப்போம்.அவர்களின் வரலாற்றை ஆராயாமல்,அவர்களின் அறவுரைகளை மட்டும் தெரிந்து கொள்வோம்.நம் பாதை பல நேரங்களில் ஆத்திகப் பாதை,சில நேரங்களில் நாத்திகப் பாதை என மாறி மாறி வரக்கூடும்.அதற்கு காரணம் அந்த மகான்களே அன்றி,வேறு யாரும் காரணமல்ல.
முதலில் பார்ப்பது சிவவாக்கியார் எனும் சித்தர். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். புத்த,சமண மதமட்டுமின்றி,சைவ,வைணவப் பிரிவையும் நன்கு அறிந்தவர். இவர் சிவ பக்தர் போல தோன்றினாலும், இவர் உருவ வழிபாட்டை எதிர்க்கிறார்.
ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள், தெளிந்தஒன்றை ஓர்கிலீர்;
காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.
என கூறுவதன் மூலம், நமக்குள்ளே இருக்கிறான் எனத் தெளிவுப்படுத்த்துவதையும் நாம் சிந்திக்க வேண்டும். அவரே மீண்டும்
'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்'
எனக் கூறுவதைப் பார்த்தால் உருவ வழிபாடு தேவையா எனக் கேள்வி எழுகிறது.
திருமூலரும் கூட 'மாசற்ற கொள்கை மனதிற் கொண்டால் ஈசனைக் காட்டும் உடம்பு' என்கிறார். தூய எண்ணம் கொண்டாலே போதும்.நற்சிந்தனை,நற்செயல் இவைதான் இறைவனைக் காண அடிப்படை தகுதி என்பது திண்ணம்.நம் எல்லோரும் மீதும் அன்பு கொள்ள வேண்டும் என்பதைத் தான் 'அன்பும் சிவனும் இரண்டென்பார் அறிவிலார்' என்றார்.
சரி, கடவுளுக்கு உருவமில்லை எனக் கொண்டால்,நம் எப்படி அவனைக் காண்பது,எப்படி பேசுவது என பல கேள்விகள் எழுப்புவதை விட, இப்படி பின்பற்ற சொன்னவர்கள் என்ன சொல்லுகிறார்கள் எனத் தேடுவோம்.
உருவ வழிபாடு தேவை இல்லை எனக் கருதும் இஸ்லாம் பக்கம் நம் பார்வையைக் கொஞ்சம் திருப்புவோம்.
பயணம் தொடரும்...
Tuesday, August 18, 2009
தேவை பாவை பார்வை

நீ வரும் நேரத்திற்காக காத்திருக்கும் கணம்,
உன் வருகைக்காக காத்திருந்து கலவரப்படும் மனம்;
நீ வரும் வழி நோக்கி பூத்திருக்கும் என் விழி;
உன் வருகை தாமதமானதால் என்னுள் எழும் கோபம்,
நீ உரசி நடக்கையில் என்னுள் எழும் தாபம்;
எதை எதையோ உளறி கொட்டும் என் எண்ணம்
எல்லாம் கேட்டு சிவந்து நிற்கும் உன் கண்ணம்;
கிளம்பும் தருணத்தில் உடைந்து நிற்கும் என் உள்ளம்,
நாளையப் பொழுத்திற்காக தவமிருக்கும் இரவு,
முத்தம் நினைத்து நித்தம் ஒரு கவிதை....
என நானும் மகிழ்ந்திருப்பேன் எனக்கும்
ஒரு காதலி கிடைத்திருந்தால்!!!......
பி.கு
----
சத்ரியனால் மட்டும் எப்படி உருகி எழுதமுடிகிறது என சிந்தித்தேன்...
Saturday, August 8, 2009
Thursday, July 30, 2009
காதலிக்கு…
காத்திருப்பதை அறிந்து களிப்புரவில்லை
கசிந்துருக மனமிருந்தும் காலம்
கனியவில்லை
காத்திருப்பதும் எதிர்பார்த்துருப்பதும்
சுகமானதுதான்
விளைவுகள் சாதகமாகுமென்றால்.
ஒவ்வொரு விடியலிலும் சாதிப்பதைப் பற்றி
ஆயிரம் கனவுகள்
ஒவ்வொரு இரவிலும் சலிப்பான நினைவுகள்
மட்டுமே நிச்சயம்.
நொறுங்கிய நினைவுகள் நெருங்கி வரும்போது
தடுத்தாட் கொள்வது உன்
நினைவுகள் மட்டுமே
உணர்வுகளால் தாக்குன்டதால் வார்த்தைகளுக்கு
இங்கு பஞ்சம்
இதை உணர வேண்டும் உனது நெஞ்சம்.
Saturday, July 25, 2009
மரம் தேடும் மழைத்துளி.

அமைதியாத்தான் போய்க்கொன்டிருந்தது வாழ்க்கை.கட்டுப்பாடற்ற நதியாய்,வேலியற்ற காற்றாய்.எதற்கும் கலங்கியதுமில்லை.கவலைப்பட நேரமும் இருந்ததில்லை.நேரத்துடன் உறங்கியதுமில்லை.பொழுதுடன் எழுந்ததுமில்லை.இப்படியா வாழ்கிறேன் என எண்ணியதுமில்லை. இவையெல்லாம் உன்னை காணூம் வரை.
இதுவரை தென்றலை நான் இப்படி ரசித்ததில்லை.காத்திருக்கும் நேரம் அதிகமானது ஆனாலும் சுகமானது.நீ வரும்வரை உன் நினைவுகள் என் துணை,வந்தபின்… எதுவும் எனக்கு நினைவில்லை.அதுவரை மெதுவாக போய்க் கொண்டிருந்த நேரம் உன்னுடன் இருக்கையில் அத்தனை வேகமாக நகரும்.வாழ்க்கையின் இன்பம் இதுவென எண்ணியிருந்தேன்.தூக்கம் மறந்தேன்,பசி மறந்தேன்.வாழ்த்து அட்டைக்கென கடைகடையாய் ஏறி இறங்கினேன்.உனக்கென பல கவிதை படித்தேன். எந்த கவிதையும் பிடிக்கவில்லை உன் பெயரைத் தவிர.உனக்கு மட்டும் எப்படி கவிதையாய் ஒரு பெயரென வியந்ததுண்டு.
மாற்றத்தை உணர்ந்தவர்கள் நண்பர்கள் என்பதால் கலவரப்படவில்லை.நம் காதலுக்கு தூபம் போட்ட நண்பர்கள்,உரமிட்டு,நீருற்றினார்கள்.என் தங்கையும் உணர்ந்தாள்,பிறகு அவளே எனக்கு தோழியுமானாள்.வீட்டிற்கு செய்தி கசியாமல் இருக்க,அவளையும் கவனிக்க வேண்டியிருந்தது.அப்படியும் செய்தி கசிய பெற்றோரை சமாதானப் படுத்த வேண்டியிருந்தது.அவர்கள் என்னை உணந்ததால்,உன்னையும் உணர்ந்து கொண்டார்கள். ஆனால்
உன் வீட்டிலோ உன்னை உணராததால்,என்னையும் உணரவில்லை,நம் காதலையும் உணரவில்லை.அணையிட்டு தடுத்தார்கள்,அன்பிலே நஞ்சிட்டார்கள்.உண்மை காதல் தோற்காது என்பார்கள்.உன்னால் அவர்களை தோற்கடிக்க இயலாமல்,நீ தோல்வி கண்டாய் நானோ துவண்டு விட்டேன்.இழப்பதற்கு மட்டுமல்ல,மறப்பதற்கும் தயாரானாய்.என்னிடம் துறப்பதற்கும்,இழப்பதற்கும் ஏதுமில்லை.இழந்து விட்டேன் என்னை,தந்து விட்டேன் உன்னிடம்.
அது ஏனோ தெரியவில்லை,இப்போதும் உன் பெயர் எனக்கு கவிதையாய் தெரிகிறது.