Thursday, July 30, 2009

காதலிக்கு…

காத்திருப்பதை அறிந்து களிப்புரவில்லை

கசிந்துருக மனமிருந்தும் காலம்

கனியவில்லை

காத்திருப்பதும் எதிர்பார்த்துருப்பதும்

சுகமானதுதான்

விளைவுகள் சாதகமாகுமென்றால்.

ஒவ்வொரு விடியலிலும் சாதிப்பதைப் பற்றி

ஆயிரம் கனவுகள்

ஒவ்வொரு இரவிலும் சலிப்பான நினைவுகள்

மட்டுமே நிச்சயம்.

நொறுங்கிய நினைவுகள் நெருங்கி வரும்போது

தடுத்தாட் கொள்வது உன்

நினைவுகள் மட்டுமே

உணர்வுகளால் தாக்குன்டதால் வார்த்தைகளுக்கு

இங்கு பஞ்சம்

இதை உணர வேண்டும் உனது நெஞ்சம்.

Saturday, July 25, 2009

மரம் தேடும் மழைத்துளி.






அமைதியாத்தான் போய்க்கொன்டிருந்தது வாழ்க்கை.கட்டுப்பாடற்ற நதியாய்,வேலியற்ற காற்றாய்.எதற்கும் கலங்கியதுமில்லை.கவலைப்பட நேரமும் இருந்ததில்லை.நேரத்துடன் உறங்கியதுமில்லை.பொழுதுடன் எழுந்ததுமில்லை.இப்படியா வாழ்கிறேன் என எண்ணியதுமில்லை. இவையெல்லாம் உன்னை காணூம் வரை.

இதுவரை தென்றலை நான் இப்படி ரசித்ததில்லை.காத்திருக்கும் நேரம் அதிகமானது ஆனாலும் சுகமானது.நீ வரும்வரை உன் நினைவுகள் என் துணை,வந்தபின்… எதுவும் எனக்கு நினைவில்லை.அதுவரை மெதுவாக போய்க் கொண்டிருந்த நேரம் உன்னுடன் இருக்கையில் அத்தனை வேகமாக நகரும்.வாழ்க்கையின் இன்பம் இதுவென எண்ணியிருந்தேன்.தூக்கம் மறந்தேன்,பசி மறந்தேன்.வாழ்த்து அட்டைக்கென கடைகடையாய் ஏறி இறங்கினேன்.உனக்கென பல கவிதை படித்தேன். எந்த கவிதையும் பிடிக்கவில்லை உன் பெயரைத் தவிர.உனக்கு மட்டும் எப்படி கவிதையாய் ஒரு பெயரென வியந்ததுண்டு.

மாற்றத்தை உணர்ந்தவர்கள் நண்பர்கள் என்பதால் கலவரப்படவில்லை.நம் காதலுக்கு தூபம் போட்ட நண்பர்கள்,உரமிட்டு,நீருற்றினார்கள்.என் தங்கையும் உணர்ந்தாள்,பிறகு அவளே எனக்கு தோழியுமானாள்.வீட்டிற்கு செய்தி கசியாமல் இருக்க,அவளையும் கவனிக்க வேண்டியிருந்தது.அப்படியும் செய்தி கசிய பெற்றோரை சமாதானப் படுத்த வேண்டியிருந்தது.அவர்கள் என்னை உணந்ததால்,உன்னையும் உணர்ந்து கொண்டார்கள். ஆனால்

உன் வீட்டிலோ உன்னை உணராததால்,என்னையும் உணரவில்லை,நம் காதலையும் உணரவில்லை.அணையிட்டு தடுத்தார்கள்,அன்பிலே நஞ்சிட்டார்கள்.உண்மை காதல் தோற்காது என்பார்கள்.உன்னால் அவர்களை தோற்கடிக்க இயலாமல்,நீ தோல்வி கண்டாய் நானோ துவண்டு விட்டேன்.இழப்பதற்கு மட்டுமல்ல,மறப்பதற்கும் தயாரானாய்.என்னிடம் துறப்பதற்கும்,இழப்பதற்கும் ஏதுமில்லை.இழந்து விட்டேன் என்னை,தந்து விட்டேன் உன்னிடம்.

அது ஏனோ தெரியவில்லை,இப்போதும் உன் பெயர் எனக்கு கவிதையாய் தெரிகிறது.


நல்லா கெளப்புராய்ங்க பீதிய.......

எழுதி எனக்கு பழக்கம் இல்லை.நிறைய படிப்பேன்.எல்லாத்தையும் படிப்பேன். அதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது உண்டு.பிறகு நாங்களே ஒரு பத்திரிக்கைப் போல ஆரம்பித்து,சில வாரங்களிலே நின்றும் போனது.ஆனால் படிப்பது மட்டும் தொடர்ந்தது.நான் எழுதுவது மிகவும் குறைவு. எனவே எப்போதாவது எழுதி,படித்த சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியதால்,இதை ஆரம்பிக்கிறேன்....

சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும் புத்தரோடு யேசுவும் உத்தமர் காந்தியும் எத்தனையோ உண்மைகளை எழுதி வச்சாங்க எல்லாந்தான் படிச்சீங்க என்னபண்ணி கிழிச்சீங்க என பட்டுக்கோட்டையார் கேட்டார். ஆமா..எல்லாருக்கும் அதையே நானும் சொன்னோம்ல...

முன்பு எழுதியதை மீள்பதிவு செய்து எழுத ஆரம்பிக்கிறேன்....

Wednesday, July 22, 2009

சொல்ல வந்ததை சொல்லுங்க....

எனக்கு சமைக்க தெரியாது...ஆனா நல்லா சாப்பிடுவேன்.எல்லா சாப்பாடும் சாப்பிடுவேன்... மனசுல வச்சுக்காதீங்க.. பின்னூட்டமா சொல்லிவிட்டு போங்க...