Thursday, November 12, 2009

சில நாட்கள் தேவை.....

அன்புள்ள வலை நண்பர்களே...
வெகு நாட்களாக நான் இந்தப் பக்கம் வருவதை நிறுத்தி விட்டேன். அதற்கு காரணம் உண்டு.
அக்டோபர் 12ந் தேதி மாலை 4:30 மணியளவில் எனது அலைபேசி ஒலித்தது. அப்போது இந்திய நேரம் அதிகாலை 3:00, குழப்பத்துடன் எடுத்தேன்.பேசியது எனது தந்தை. பேரிடியாக ஒரு தகவல் தந்தார். எனது சகோதரன் எங்களை விட்டுப் பிரிந்ததாகச் சொன்ன போது எனக்கு ஒன்றும் புரியவில்லை.

எனது சகோதரர்(வயது 40), சிங்கப்பூரில் உள்ள தேசியப் புற்று நோய் கழகத்தில், விஞ்ஞானியாக பணியாற்றினார்.எதைப்பற்றி ஆராய்ச்சி செய்தாரோ அதே புற்று நோயால் உலகையும் எங்களையும் விட்டுப் பிரிந்தார்.எனவே நான் இந்தியாச் சென்று திரும்பியிருக்கிறேன்.இன்னும் அதிர்ச்சி மீளாமல் இருக்கிறேன்.

என்னைக் காணாமல் தேடிய நல் உள்ளங்களுக்கு(குறிப்பாக தோழர் கருணாகரசு அவர்களுக்கு) நன்றி.மீண்டு(ம்) வருவேன்.முன் போல் தொடருவேன் இன்னும் சில நாட்களில்.....