Thursday, September 3, 2009

ஔவை – சுட்ட பழம்...

‘அரிதரிது மானிடராதல் அரிது மானிடராயினும் கூன்குருடுசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும்நயத்தலரிது’

- இது,’அரியது எது? என்ற முருகனின் கேள்விக்கு ஔவையின் பதில். தகடூரை ஆண்ட அதியமான் ஔவைக்கு நெல்லிகனி கொடுத்தது,ஆத்திசூடி இவற்றின் மூலம் நமக்கு அறிமுகமானவர் இவர்.

ஔவையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்தனர் என்றும்,பெண்பாற் புலவர்களை இந்த பெயரில் அழைததனர் என்றும் பல்வேறு செய்திகள் உள்ளன. மிக எளிமையாகவும்,சுருங்கவும் சொல்லுவதில் வல்லவர். வள்ளுவர் எழுதிய குறளை விடவும் சுருங்க சொன்னவர்.
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”
இதை “எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” என்று சுருக்கினார்.

ஔவையார் சிறுமியாய் இருக்கும்பொழுது ஒரு புலவர் அவரது தந்தையாரைக் காண வருவார். அவர் எழுதிய கவிதை ஒன்று,

நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா -

என்று பாதியில் நின்றுவிட்டதென்று சொல்ல அப்போது அங்கு வந்த சிறுமி ஔவை

நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

என்று மீதிப்பாடலைக் கூறினார்.

பொருள் : நாம் ஒருவருக்கு உதவி செய்கையில் அதன் கைம்மாறான பலன் நமக்கு என்று கிடைக்கும் என்று எண்ணிச் செய்யக்கூடாது. தென்னை மரம் அதன் வேரில் ஊற்றும் தண்ணீரை உண்டு வளர்ந்து, இளநீராகவும் தேங்காய்களாகவும் தன் தலையில் உருவாக்கி நமக்குத் தருவது போல் நாம் பிறர்க்குக் கைம்மாறு கருதாமல் உதவினால் நமக்கு உதவி தேவைப்படுகையில் அது தானாகவே கிடைக்கும்.

ஔவை ஒரு சமயம் குலோத்துங்கன் அரசவைக்கு வருகை தந்தபொழுது ,ஆணாதிக்கம் மிக்க அந்த காலத்தில், கம்பர் அவரைப் பார்த்து ஔவையாருக்கும் ஆரைக்கீரைக்கும் சிலேடையாக தரக்குறைவாக(டீ என) விமர்சிக்க,

“ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ”

என்று கூற ஔவையார் கோபங்கொண்டு

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா விடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது

என்று பதில் வந்தது ஔவையிடமிருந்து.

எட்டு (8) என்ற எண்ணுக்குத் தமிழில் “அ”, கால் (1/4) என்ற எண்ணுக்கு “வ”, அதனால் எட்டேகால் லட்சணமே என்றால் “அவலட்சணமே” என்றாகிறது. எமன்ஏறும் பரி என்றால் எருமை.பெரியம்மை என்றால் மஹாலக்ஷ்மியின் அக்காளான மூதேவி. கூரையில்லா வீடென்றால் குட்டிச்சுவர். குலராமன் தூதுவன் அனுமன் ஒரு குரங்கு. கம்பர் ராமாயணத்தை எழுதியதால் அவர் ஒரு வகையில் ரராமனின் தூதுவனாகிறார். நீ சொன்னது ஆரைக்கீரை எனும் பொருள்பட அடீ என்று சொன்னதற்கு பதிலுரையாக “அடா”வைச் சேர்த்து ஆரையடா என்றார்.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று”
- இவை நாம் சிறுவயதில் படித்தவை.கொன்றை வேந்தன் என்னும் நூலில் உள்ள பாடல்கள் இவை.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை”
- இடு மூதுரையில் உள்ள பாடல்.
பெரும்பாலான பாடல்களுக்கு விளக்கவுரை தேவையில்லை என்பது இவரது சிறப்பு.

Tuesday, September 1, 2009

மெய்யாலுமே சொல்லுறேன்.....

நண்பர் நட்புடன் ஜமால் அவர்கள் என்னை அழைத்திருக்கிறார். பொதுவாக எழுத்தானைத் தான் அழைப்பார்கள்.வாசகனையும் அழைத்த நண்பருக்கு எனது நன்றிகள்.

The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABCs of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag.


1. அன்புக்குரியவர்கள்: எதிரிகளும் கூட
2. ஆசைக்குரியவர்: சர்மிளா(மனைவியாய் இப்போது, காதலியாய் எப்போதும்)
3. இலவசமாய் கிடைப்பது: அறிவுரை
4. ஈதலில் சிறந்தது: வறியார்க் கொன்று ஈவதே
5. உலகத்தில் பயப்படுவது: துரோகிகளுக்கு
6. ஊமை கண்ட கனவு: கானல் நீர்
7. எப்போதும் உடனிருப்பது:புன்னகையும் கோபமும்
8. ஏன் இந்த பதிவு: நட்புடன் ஜமால் அழைத்ததால்...
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: போதும் எனற மனம்
10. ஒரு ரகசியம்: சொல்லிவிட்டல் தகுதி இழந்துவிடுமே
11. ஓசையில் பிடித்தது: குழல் இனிது யாழ் என்பர் தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்
12. ஔவை மொழி ஒன்று: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
13. (அ)ஃறிணையில் பிடித்தது:புத்தகங்கள்(ந்ம்மை உயர்திணையாக்குவதால்)

1. A – Available/Single? Nope,It's too late to ask
2. B – Best friend? : Everyone who believes me
3. C – Cake or Pie?: None
4. D – Drink of choice? : Tender coconut water
5. E – Essential item you use every day? :Mobile phone
6. F – Favorite color? : white
7. G – Gummy Bears Or Worms?: Table etiquette
8. H – Hometown? - it's tiny world
9. J – January or February? No. it's June
10. K – Kids & their names? Anbukumaran (Boy Baby)
11. L – Life is incomplete without? – wife & Money
12. M – Marriage date? 08 Nov
13. N – Number of siblings? 2brothers & 1sister
14. O – Oranges or Apples? oranges
15. P – Phobias/Fears? careless
16. Q – Quote for today? : God Looks down to all who look up.
17. R – Reason to smile? : HE decides
18. S – Season? Winter(india) Falls(America, It is not session but….)
19. T – Tag 4 People? ஹேமா, என் வானம் அமுதா, விக்னேஷ்வரி,நிலா மகள்
20. U – Unknown fact about me? In search of that...
21. V – Vegetable you don't like? Cabbage
22. W – Worst habit? laziness
23. X – X-rays you've had? Right hand when i met accident(2003,at Adyar,chennai)
24. Y – Your favorite food? Rice,Kara kuzhampu(India),chicken chalupas,Bean Baritto(America)