Thursday, July 30, 2009

காதலிக்கு…

காத்திருப்பதை அறிந்து களிப்புரவில்லை

கசிந்துருக மனமிருந்தும் காலம்

கனியவில்லை

காத்திருப்பதும் எதிர்பார்த்துருப்பதும்

சுகமானதுதான்

விளைவுகள் சாதகமாகுமென்றால்.

ஒவ்வொரு விடியலிலும் சாதிப்பதைப் பற்றி

ஆயிரம் கனவுகள்

ஒவ்வொரு இரவிலும் சலிப்பான நினைவுகள்

மட்டுமே நிச்சயம்.

நொறுங்கிய நினைவுகள் நெருங்கி வரும்போது

தடுத்தாட் கொள்வது உன்

நினைவுகள் மட்டுமே

உணர்வுகளால் தாக்குன்டதால் வார்த்தைகளுக்கு

இங்கு பஞ்சம்

இதை உணர வேண்டும் உனது நெஞ்சம்.

6 comments:

சத்ரியன் said...

//ஒவ்வொரு விடியலிலும் சாதிப்பதைப் பற்றி
ஆயிரம் கனவுகள்
ஒவ்வொரு இரவிலும் சலிப்பான நினைவுகள்
மட்டுமே //

இயலாமல் போவதையும் வலிக்காமல் வெளிப்படுத்தி எழுதியிருக்கின்றீகள். சில நேரங்களில் எளிமையானச் சொற்களே வலிமையான கவிதைகளை வலம் கொண்டு வருவதுண்டு. உங்கள் கவிதை இந்த ரகம் என்பதால், எல்லோருக்கும் பிடிக்கும்.

மீண்டும் வருவேன்.

அமுதா said...

/*உணர்வுகளால் தாக்குன்டதால் வார்த்தைகளுக்கு
இங்கு பஞ்சம்
இதை உணர வேண்டும் உனது நெஞ்சம்*/
அருமை

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு.

குரும்பையூர் மூர்த்தி said...

இயல்பாய் இருக்கின்றது கவிதை. நிறைய எழுதுங்கள். சொற்பிளைகள் தவிர்த்தல் நலம்.

அரங்கப்பெருமாள் said...

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி மூர்த்தி அவர்களே... தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். நிச்சயம் திருத்திக் கொள்கிறேன். பின்னூட்டத்திலே சொல்லலாம். படிக்கும் பிறருக்கும் பயன்படும்.

நையாண்டி நைனா said...

நல்லா இருக்கே....